என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » கேஷியர் கைது
நீங்கள் தேடியது "கேஷியர் கைது"
மதுராந்தகம் அருகே வங்கியில் ரூ. 7 லட்சம் பணத்தை கையாடல் செய்த கேஷியரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
காஞ்சீபுரம்:
மதுராந்தகம் அருகே உள்ள சித்தாமூரில் ‘சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா’ வங்கி உள்ளது. இங்கு கேஷியராக பணியாற்றி வந்தவர் மோகன். இவர் கடந்த 2 ஆண்டுக்கும் மேலாக இங்கு பணிபுரிந்து வந்தார்.
கிராமப்புற பகுதி என்பதால் வங்கி வாடிக்கையாளர்கள் பலர் தங்களது செல்போன் எண், இ-மெயில் முகவரியை வங்கி கணக்குடன் இணைக்காமல் இருந்தனர்.
இந்த நிலையில் வாடிக்கையாளர்கள் பலரது வங்கி கணக்கில் இருந்து பணம் குறைந்து இருந்தது. இதனை அறிந்த வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுபற்றி அவர்கள் காஞ்சீபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். போலீசார் விசாரணை நடத்தியபோது வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் இருந்து அவர்களுக்கே தெரியாமல் ரூ. 7 லட்சம் வரை கேஷியர் மோகன் மோசடி செய்து இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
வங்கி கணக்குடன் செல்போன் எண், இ-மெயில் முகவரியை இணைக்காத வாடிக்கையாளர்களை குறி வைத்து அவர் சிறிது, சிறிதாக பணத்தை சுருட்டி இருக்கிறார்.
இதையடுத்து கேஷியர் மோகனை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மதுராந்தகம் அருகே உள்ள சித்தாமூரில் ‘சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா’ வங்கி உள்ளது. இங்கு கேஷியராக பணியாற்றி வந்தவர் மோகன். இவர் கடந்த 2 ஆண்டுக்கும் மேலாக இங்கு பணிபுரிந்து வந்தார்.
கிராமப்புற பகுதி என்பதால் வங்கி வாடிக்கையாளர்கள் பலர் தங்களது செல்போன் எண், இ-மெயில் முகவரியை வங்கி கணக்குடன் இணைக்காமல் இருந்தனர்.
இந்த நிலையில் வாடிக்கையாளர்கள் பலரது வங்கி கணக்கில் இருந்து பணம் குறைந்து இருந்தது. இதனை அறிந்த வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுபற்றி அவர்கள் காஞ்சீபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். போலீசார் விசாரணை நடத்தியபோது வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் இருந்து அவர்களுக்கே தெரியாமல் ரூ. 7 லட்சம் வரை கேஷியர் மோகன் மோசடி செய்து இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
வங்கி கணக்குடன் செல்போன் எண், இ-மெயில் முகவரியை இணைக்காத வாடிக்கையாளர்களை குறி வைத்து அவர் சிறிது, சிறிதாக பணத்தை சுருட்டி இருக்கிறார்.
இதையடுத்து கேஷியர் மோகனை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X